உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கால்பந்து

0

Posted on : Wednesday, August 18, 2010 | By : ஜெயராஜன் | In :

யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது.விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன்,பூச்சிக் குழுவின்  தலைவனிடம்,''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''பூச்சித்தலைவன் சொன்னது,''அதுவா,பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment