உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இறந்தபிறகு...

1

Posted on : Monday, February 03, 2014 | By : ஜெயராஜன் | In :

சீடன் ஒருவன் தனது குரு கன்பூசியசிடம் ,''இறந்த பிறகு என்ன நடக்கும்?''என்று கேட்டான்.அதற்கு அவர்,''இதற்குப் போய் நேரத்தை வீணடிக்காதே.நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப் பற்றி சிந்தனை செய்து கொள்ளலாம்.இப்போது அதைப் பற்றிக்
கவலைப்படாதே.''என்றார்.இந்த மாதிரிதான் அநேகம் பேர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாமும் அப்போது சிந்தனை செய்து கொள்ளலாம்.ஒன்றும் அவசரமில்லை.யாராவது இறக்கும்போது மற்றவர்கள் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டு,''ஐயோ,மனிதர்களெல்லாம் கடைசியில் கல்லறையைத்தான் சந்திக்க வேண்டுமா?'' என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் தானா?''நான் பிறக்கும்போது நான் எந்தக் கவலையும் சுமந்திருக்கவில்லை.எந்த மாதிரியான துன்பங்களை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.இப்படி எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே இருந்தேன்.ஏன்,அப்போது,'நான்' என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.அதைப் போல இறக்கும்போதும்,அதே உணர்வுடன் தான் இருப்பேன்,''என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் துன்பம் ஏது?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

(Atleast) இந்த நினைவு இருந்தால் தான் பிரச்சனையே இல்லையே...

Post a Comment